1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 19 மே 2019 (16:11 IST)

உல்லாசம் அனுபவித்துவிட்டு பேச மறுத்த பெண்! கள்ளக்காதலன் வெறிச்செயல் !

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவர் கள்ளத்தொடர்ப்பு வைத்திருந்தார். இது அவரது கணவருக்குத் தெரிய இதைக் கண்டித்துள்ளார்.இதனால்  அப்பெண் தன் கள்ளக்காதலை முறித்துக்கொண்டார். இதில் ஆத்திரமடைந்த காதலன் அவர் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆண்டுகளாக அப்பெண்ணிற்கு புதிய நபரின் அறிமுக கிடைத்துள்ளது.தனது கணவனைவிட அதிக பாசத்துடன் அந்த நபர் இருக்கிறார் என்பதால் அது கள்ளக்காதலாக மாறியது. அதனால் அடிக்கடி உல்லாசன் அனுபவித்தனர்.
 
இது எப்படியோ கணவனுக்குத் தெரிந்துவிட்டது.ஆனால் கணவன் மனைவியிடன் இதுபற்றிக் கேட்டு கண்டித்துள்ளார். இதனையடுத்து அப்பெண், அந்தக் கள்ளக்காதலனுடன் பேசுவதை கைவிட்டுவிட்டார்.
 
இதனை எதிர்பார்க்காத அந்த நபர், அப்பெண் முகத்தில் ஆசிட் வீசிவிட்டான், அப்பெண்ணின்  அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.தற்போது அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.
 
இதனையடுத்து போலிஸார் அப்பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். இதனடிப்படையில் போலிஸார் அந்நபரை தேடி வருகின்றனர்.