1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 26 ஜனவரி 2020 (14:52 IST)

பிரபல நடிகர் உள்ளிட்ட 15 பேருக்கு கொலை மிரட்டல் !

கர்நாடக மாநில  முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிருந்தா காரத் உள்ளிட்ட 15 பேருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் பிரபலமான 15 பேருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. 
 
அந்தக் கடிதத்தில், பி.டி.லலிதாநாயக்,  மகேஷ் சந்திர குரு,  பேராசிரியர் பகவன்,  முன்னாள் முதல்வருக்கு ஆலோசகராக இருந்த தினேஷ்,  அக்னி ஸ்ரீதர்,  பிருந்தா காரத், நடிகர் சேதன்குமார், நிஜகுணாந்தன சுவாமி, பஜ்ரங்தள் தலைவர் மகேந்திரகுமார் ஆகியோருக்கு ஜனவரி 29 ஆம் தேதி கொலை செய்யப்படுவார்கள் என அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளது.
 
இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.