1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2020 (14:25 IST)

லிஃப்ட் கேட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில் 10 பேர் கைது!

திரிபுரா மாநிலத்தில் காரில் லிப்ட் கேட்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்த 10 பேர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்துள்ளது.

திரிபுரா மாநிலத்தில் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தெலிமுரா என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காரில் லிப்ட் கேட்டுள்ளார். அவருக்கு உதவுவதாக சொல்லி அந்த காரில் இருந்தவர்கள் அவரை கடத்திச் சென்று வனப்பகுதியில் வைத்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த மாநிலத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 8 பேரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 2 பேரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.