தொடர்புடைய செய்திகள்
- நேற்று திடீரென உச்சம் சென்ற பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம் என்ன?
- 10 நாட்களாக உயர்ந்து வந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- 3வது நாளாக பங்குச்சந்தை உயர்வு.. சென்செக்ஸ் 81 ஆயிரத்தை தாண்டியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!
- பங்குச்சந்தை 2வது நாளாக மீண்டும் உயர்வு.. உச்சம் நோக்கி செல்லுமா நிஃப்டி?
- வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. இறங்கி வரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
2 வாரங்களாக உயர்ந்த பங்குச்சந்தை இன்று சரிவு.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!
கடந்த இரண்டு வாரங்களாக பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்துள்ளது. தற்போது, பங்குச்சந்தை ஆரம்பம் முதலில் சரிவில் தொடங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும், குறைந்த அளவே சரிவு உள்ளதால், மதியத்திற்கு மேல் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில், 197 புள்ளிகள் குறைந்து, 89518 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 51 புள்ளிகள் குறைந்து, 24628 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, சன் பார்மா, டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளது.
ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Edited by Siva
