1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (10:45 IST)

2 நாள் சரிவுக்கு பின் திடீரென உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி,..!

share
இந்தியா பங்குச் சந்தை கடந்த இரண்டு நாட்களாக சரிந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
மும்பை பங்கு சந்தை சற்று முன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 255 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து 65 ஆயிரத்து 500 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 77 புள்ளிகள் உயர்ந்து 19,458 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
கடந்த இரண்டு நாட்களாக பங்கு சந்தை சரிந்த நிலையில் இன்று மீண்டும் பங்கு சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. 
 
மேலும் அடுத்த வாரம் பங்குச்சந்தை இன்னும் உயர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
 
 
Edited by Siva