1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Share market sensex and nifty status

3வது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

Share Market
கடந்த இரண்டு நாட்களாக இந்திய பங்குச் சந்தை சரிந்து வரும் நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை இந்திய பங்குச் சந்தை தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் நிப்டி 130 புள்ளிகள் சரிந்து 61,300 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையால நிப்டி 53 புள்ளிகள் சரிந்து 18,076 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. பங்குச்சந்தை இனிவரும் நாட்களில் சரிய வாய்ப்பு இருப்பதாகவும் எனவே பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் தகுந்த முதலீட்டு ஆலோசர்களிடம் ஆலோசனை செய்து அதன் பின்னர் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் நீண்ட நாள் முதலீட்டாக பங்குச்சந்தை சிறப்பான லாபத்தை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பிபிசி தமிழுக்கு நளினி பேட்டி: கணவர் முருகனுடன் இலங்கை செல்ல திட்டமா? - முழு விவரம் இங்கே