1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (10:09 IST)

58,000-த்தை கடந்து புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ்

இன்று மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 307 புள்ளிகள் உயர்ந்து 58,437 என்ற புதிய உச்சம் தொட்டது.
 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.  அதிலும் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உச்சத்திற்கு சென்று வருகிறது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் 57 ஆயிரம் புள்ளிகளை கடந்தது என்பது தெரிந்ததே. 
 
இந்நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 307 புள்ளிகள் உயர்ந்து 58,437 என்ற புதிய உச்சம் தொட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 89 புள்ளிகள் அதிகரித்து 17,413 என்ற புதிய உச்சத்தில் வணிகம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.