தொடர்புடைய செய்திகள்
- 40% ஜிஎஸ்டி வரி : ஐபிஎல் டிக்கெட் விலை உயரும் என தகவல்.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!
- ரஜினி & கமல் இணையும் படம் ட்ரப்பா?... திடீரெனப் பரவும் தகவல்!
- பெண் காவல் கண்காணிப்பாளரை "நாயுடன்" ஒப்பிட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ: வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!
- எந்தெந்த பொருட்களுக்கு வரியே இல்லை.. ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்த நிர்மலா சீதாராமன்..!
- ஜிஎஸ்டி சீர்திருத்தம் வரவேற்கத்தக்கது; ப. சிதம்பரம் X தளத்தில் பதிவு
ஜிஎஸ்டி வரி குறைப்பு அறிவிப்பு எதிரொலி.. ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை..!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டதையடுத்து, இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. இந்த உயர்வு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 465 புள்ளிகள் உயர்ந்து 81,020 புள்ளிகளை எட்டியுள்ளது.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 135 புள்ளிகள் உயர்ந்து 24,846 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய வர்த்தகத்தில், பெரும்பாலான பங்குகள் ஏற்றத்தில் உள்ளன. இருப்பினும், ஏர்டெல், இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ், மாருதி, சன் ஃபார்மா, டெக் மஹிந்திரா போன்ற ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
இந்த ஏற்றம், ஜி.எஸ்.டி. வரி குறைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
