செவ்வாய், 3 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva

நேற்று சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் சரிவு.. இன்று இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை.. நாளையும் விடுமுறையா?

நேற்று சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் சரிவு.. இன்று இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை.. நாளையும் விடுமுறையா?
ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று அதாவது மார்ச் 3ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், நாட்டின் பல பகுதிகளில் மார்ச் 4 அன்றுதான் ஹோலி கொண்டாடப்படுவதால், இந்த விடுமுறை தேதி குறித்து வர்த்தகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. 
 
தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தை ஆகியவை இன்று முழுமையாக மூடப்பட்டிருக்கும்; ஈக்விட்டி மற்றும் டெரிவேட்டிவ் பிரிவுகளில் வர்த்தகம் நடைபெறாது. அதே சமயம், MCX சந்தை மாலை வேளையில் மட்டும் செயல்படும்.
 
ஈரான் போர் பதற்றம் காரணமாக நேற்று சென்செக்ஸ் 1,048 புள்ளிகளும், நிஃப்டி 312 புள்ளிகளும் சரிந்தன. இத்தகைய உலகளாவிய சூழலில், புதன்கிழமையும் விடுமுறை அளிப்பது சந்தையின் ஏற்ற இறக்கத்தை தவிர்க்க உதவும் என சில முதலீட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
ஒரு தரப்பு வர்த்தகர்கள் தவறான தேதியில் விடுமுறை அளிக்கப்பட்டதாக கூறி, மார்ச் 4 அன்று வர்த்தகத்தை புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்துள்ளனர். மார்ச் 4 அன்று பல மாநிலங்களில் ஹோலி கொண்டாடப்படும் நிலையில் சந்தை மீண்டும் செயல்பட தொடங்கும்.
 
Edited by Siva