தொடர்புடைய செய்திகள்
- அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ. ... பெயர் மாற்றத்தை செம்மையாக நடத்தி முடித்த முதல்வர்!
- மேலும் ஒரு மாத ஊரடங்கு: கொரோனாவை வெல்லுமா சென்னை??
- சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர்: எந்தெந்த நிலையங்களுக்கு என்னென்ன பெயர்?
- பக்ரீத் பண்டிகையின் போது விலங்குகளை பலியிட கூடாது - உயர் நீதிமன்றம்
- மாவட்டவாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு: சென்னையை அடுத்து செங்கல்பட்டில் அதிக பாதிப்பு!
வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை ரூ.41,000 !!!
நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் தங்கம் விலை தற்போது 41 ஆயிரத்தை தொட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.40,824 ஆக உயர்ந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.28 அதிகரித்து ரூ.5,103 ஆக விற்பனையாகி வந்தது.
ஆனால் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.41,000க்கு விற்பனை ஆகிறது. வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
