1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (12:22 IST)

திமுக விருப்ப மனு தாக்கல்.! இன்றே கடைசி நாள்.!!

Kanimozhi
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுகவினர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாளாகும்.
 
மக்களவைத் தேர்தலில் திமுக தரப்பில் போட்டியிட விரும்புவோர், அதற்கான விருப்ப மனுக்களை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் சமர்ப்பித்து வருகின்றனர்.
 
இதுவரை நூற்றுக்கணக்கானோர் விருப்ப மனுக்களை பெற்றுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி விருப்ப மனு  தாக்கல் செய்தார். அதேபோல் அமைச்சர் கே என் நேருவின் மகன் அருண் நேரு விருப்ப மனு தாக்கல் செய்தார். 

அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுவை சமர்ப்பித்தார். சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அவர்களின் மகன் அலெக்ஸ் அப்பாவு, திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தார்.


ஏராளமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுகவினர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.