1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 28 மார்ச் 2024 (13:25 IST)

40 தொகுதிகளிலும் மனுக்கள் ஏற்பு.! எந்த கட்சி வேட்பாளர்கள் தெரியுமா..?

seeman
40 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
 
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும்  ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாட்டில் 1,749 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 
 
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. வேட்பு மனுவில் குளறுபடி, ஏதேனும் புகார்கள் இருந்தால் அந்த மனுவை தேர்தல் அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்களின் மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 
இந்நிலையில் 40 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.