1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (12:18 IST)

பாதியில் நின்ற ஐபிஎல் 2021: மீண்டும் துவங்குவது எப்போது?

பாதியில் நிறுத்திய ஐபிஎல் 2021 தொடரை மீண்டும் நடத்துவதற்கு இங்கிலாந்துக்கு எதிரான  டெஸ்ட் போட்டியை முன்கூட்டியே வைக்க கோரிக்கை. 

 
இந்தியாவில் ஐபிஎல் போட்டி கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கிய நிலையில் 50 போட்டிகள் நடைபெற்று முடிந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிறது என்பதும் குறிப்பாக மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்ததாலும் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
 
இதனால் 51வது போட்டியில் இருந்து அனைத்து போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தும் நிலை இல்லை என்பதால் வெளிநாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
இந்நிலையில், பாதியில் நிறுத்திய ஐபிஎல் 2021 தொடரை மீண்டும் நடத்துவதற்கு வசதியாக இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஒருவாரம் முன்னதாக மாற்றுமாறு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது.