வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Modified: செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (19:47 IST)

டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்ய முடிவு!

ஐபிஎல் தொடரின் 11-வது சீசனின் ஐந்தாவது போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
 
ஐபிஎல் தொடரின் 11-வது சீசன் ஐந்தாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை தனது சொந்த மண்ணில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இரண்டு அணிகளுமே ஏற்கனவே இந்த சீசனில் ஒரு போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி மும்மைக்கு எதிராவும், கொல்கத்தா அணி பெங்களூருக்கு எதிராகவும் வெற்றி கண்டது. 
 
இந்நிலையில், இரு அணிகளுக்கும் எதிரான ஐந்தாவது போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது.