தொடர்புடைய செய்திகள்
- சரும நோய்கள் வராமல் தடுக்க உதவும் பிரக்கோலி !!
- தொடர்ந்து கொத்தமல்லி ஜுஸ் குடிப்பதால் இரத்த அழுத்த பிரச்சனை தீருமா....?
- சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!
- முகத்தில் முகப்பரு வந்தால் கையாளவேண்டிய முறைகள் என்ன?
- உடல் முழுவதும் உள்ள வலிகளை போக்க பாதங்களில் மசாஜ் செய்து பாருங்க !!
தலைமுடி பிரச்சனைகளுக்கு அற்புத தீர்வு தரும் சில குறிப்புகள் !!
சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கலாம்.
பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.
வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கனும். பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது.
வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும். அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
வேப்பிலை சாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம். வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்.
தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம். மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.
வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம்மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1 மணிநேரம் ஊறவைத்து பின்பு குளிக்கலாம். மண்டை கரப்பான் நோய் குணமாக பப்பாளி பாலையும் படிகாரத்தையும் சேர்த்து தடவலாம்.
அடுத்த கட்டுரையில்
