தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 5 நாட்களுக்கு சுட்டெரிக்கப் போகும் வெயில்.. வானிலை மையம் எச்சரிக்கை..
- தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா
- கடும் தண்ணீர் பஞ்சம் எதிரொலி: வொர்க் ப்ரம் ஹோம் கேட்கும் பெங்களூரு ஊழியர்கள்..!
- தமிழகத்துக்குத் தண்ணீர் என்ற பேச்சுக்கே இடமில்லை: கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் திட்டவட்டம்!
- கடும் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படும் பெங்களூர்… ஆர் சி பி போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறதா?
கோடை காலத்திற்கு ஏற்ற பானங்கள் என்னென்ன?
கோடை வெயில் கொளுத்த தொடங்கிவிட்ட நிலையில் கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளக்கூடிய பானங்கள் குடிக்க வேண்டும் குறிப்பாக தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இந்த நிலையில் கோடையில் என்னென்ன பானங்கள் குடிக்க வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
கோடை காலத்திற்கு ஏற்ற சில பானங்கள்:
மண்பாண்டத்தில் வைக்கப்படும் நீர் இயற்கையாகவே குளிர்ச்சியாக இருக்கும்.
வெட்டிவேர் நீர் உடல் சூட்டை குறைத்து, தாகத்தை தணிக்கும்.
சீரக நீர் செரிமானத்தை மேம்படுத்தி, உடல் வெப்பத்தை குறைக்கும்.
வெந்தய நீர் உடல் சூட்டை குறைத்து, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்.
கருப்பட்டி நீர் சக்தியை அதிகரித்து, உடல் வெப்பத்தை குறைக்கும்.
எலுமிச்சை சாறு வைட்டமின் சி சத்து நிறைந்தது மற்றும் தாகத்தை தணிக்கும்.
தர்பூசணி சாறு நீர்ச்சத்து நிறைந்தது மற்றும் உடல் வெப்பத்தை குறைக்கும்.
மாம்பழ சாறு வைட்டமின் ஏ சத்து நிறைந்தது மற்றும் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.
கொய்யா சாறு வைட்டமின் சி சத்து நிறைந்தது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இளநீர் இயற்கையான ஸ்போர்ட்ஸ் பானம் மற்றும் உடல் நீரிழப்பை சரிசெய்ய உதவும்.
மோர் செரிமானத்தை மேம்படுத்தி, உடல் வெப்பத்தை குறைக்கும்.
கற்றாழை ஜூஸ் உடல் சூட்டை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Edited by Mahendran
