1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Why ashwin did not appoint as captain

ஏன் அஸ்வினைக் கேப்டனாக நியமிக்கவில்லை… ரசிகர்களின் ஆதங்கக் குரல்!

MS Dhoni Captain
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அந்த அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கில் போட்டிகளில் தோற்று  புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

இதனால் வெறிகொண்ட சி எஸ் கே ரசிகர்களே அணியை விமர்சித்து வரும் நிலையில், சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மொத்தமாக இந்த தொடரிலிருந்து விலகுகிறார். இனி வரும் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்பதால், மீண்டும் தோனியை சிஎஸ்கேவின் கேப்டனாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தோனி, கேப்டன் ஆனதில் சி எஸ் கே ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், ஒரு சிலர் ரசிகர்கள் ஏன் அஸ்வினைக் கேப்டனாக நியமிக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். தோனி கேப்டன்சி போதும் என வெளியேறிவிட்ட நிலையில் ருத்துராஜுக்கு ஆதரவாக இனி வரும் சீசன்களில் உதவும் ஒருவரைக் கேப்டனாக நியமித்திருக்கலாமே என ஆதங்கக் குரல் எழுப்பியுள்ளனர்.
About Writer
vinoth