தொடர்புடைய செய்திகள்
- 400 ரன்களை நோக்கி இந்திய அணி… இலங்கை பவுலர்கள் திணறல்!
- விக்கெட்டே இல்லாமல் 100 ரன்களை தாண்டிய இந்தியா.. ரோஹித் சர்மா அபார அரைசதம்
- இந்தியா - இலங்கை ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்றது யார்?
- வீரர்களுக்கு இந்த டெஸ்ட் எல்லாம் தேவையில்லை… சுனில் கவாஸ்கர்!
- டி 20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேனா?.... ரோஹித் ஷர்மா பதில்!
ஒருநாள் போட்டிகளில் 45 ஆவது சதம்... ரன்மெஷின் கோலியின் அடுத்த சாதனை
இந்திய அணியின் மூத்த வீரர் கோலி, தன்னுடைய 44 ஆவது சதத்தை அடித்து மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்தியா மாற்றம் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் கில் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர்.
ரோஹித் ஷர்மா 83 ரன்களும், கில் 70 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து இறங்கிய கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் மூன்றாவது இறங்கிய இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி, அதிரடியாக விளையாடி சதமடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் அவரின் 45 ஆவது சதமாகும். இந்தியாவில் அவர் அடித்த 20 ஆவது சதமாகும். இதன் மூலம் இந்தியாவில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்