1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Virat Kohli has set a new record in T20 cricket

டி-20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த விராட் கோலி

Virat Kohli
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணி வீரர் வீரர் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் 1 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.  நேற்று நடைபெற்ற 3 வது லீக் போட்டியில்,  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கொல்கத்தா அணியுடன் மோதியது.

சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  பெங்களூர் அணி 20 ஓவர்களில் 179 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோற்றது.

விராட் கோலி 54  ரன்கள் எடுத்தார். இந்த நிலையில்  விராட் கோலி அரைசதம் அடித்ததன் மூலம் சின்னசாமி மைதானத்தில்  அனைத்து வகையான டி20 போட்டிகளிலும் சேர்த்து 201  ரன்கள் சேர்த்துள்ளார்.

எனவே டி20 போட்டியில்,  சின்னசாமி மைதானத்தில் 3000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை தன் வசமாக்கினார்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ராஜஸ்தான் அணிக்கு எதிராக 2வது தோல்வி: பேட்டிங்கில் சொதப்பிய சிஎஸ்கே