தொடர்புடைய செய்திகள்
- ஆர் சி பி ஜெயிக்குற வரை ஸ்கூலுக்கு போகமாட்டேன்… இந்த பையனுக்காவது கப் அடிங்கப்பா!
- எங்கள் கைக்கு வந்த வெற்றியை அவர்களிடம் தாரை வார்த்துவிட்டோம்… கோலி வேதனை!
- பெங்களூரு பந்துவீச்சாளர்களை பொளந்து கட்டிய கொல்கத்தா.. 201 இலக்கு..!
- டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு.. கொல்கத்தாவுக்கு வெற்றி கிடைக்குமா?
- குறைந்த விலையுள்ள சேலைக்காக அடித்துக்கொண்ட பெண்கள்
டி-20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த விராட் கோலி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணி வீரர் வீரர் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் 1 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 3 வது லீக் போட்டியில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கொல்கத்தா அணியுடன் மோதியது.
சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 179 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோற்றது.
விராட் கோலி 54 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் விராட் கோலி அரைசதம் அடித்ததன் மூலம் சின்னசாமி மைதானத்தில் அனைத்து வகையான டி20 போட்டிகளிலும் சேர்த்து 201 ரன்கள் சேர்த்துள்ளார்.
எனவே டி20 போட்டியில், சின்னசாமி மைதானத்தில் 3000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை தன் வசமாக்கினார்.
அடுத்த கட்டுரையில்