ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 ஏப்ரல் 2021 (17:26 IST)

சரிவு ஆரம்பம்...கோலியின் அணிக்கு நேர்ந்த சோகம்...ரசிகர்கள் அதிர்ச்சி

2021-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், அனைத்து அணிகளும் தங்களின் திறமைகளை நிரூபித்து வருகின்றன.

இந்நிலையில், கேப்டன் கோலியின் தலைமையிலான பெங்களூர் அணி சரிவைச் சந்தித்து வருவதுடன் தற்போது ஒரு அந்த அணியின் சோகமான நிகழ்வு நடந்துள்ளது.

ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியில் சென்னையிடம் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது. முதல் 4 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்ற பெங்களூர் அணியின் முதல் தோல்வியால் சரிவு ஆரம்பமாகிறதோ என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பெங்களூர் அணியிலிருந்து ஆஸ்திரேலியா  வீரர்களான  ஆடம் சம்பா, மேன் ரிச்சர்ட்சன் இருவரும் இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவிவருவதால் அவர்கள் இந்த முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.