தொடர்புடைய செய்திகள்
- கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்
- 2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!
- தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!
- இன்று மீண்டும் மோதும் சிஎஸ்கே vs ஆர் சி பி… மழையால் போட்டி பாதிக்கப்படுமா?
- ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி படைக்காத மோசமான சாதனை… இந்த ஆண்டில் நடந்திடுமோ?
இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. பாதியிலேயே தொடரில் இருந்து ருத்துராஜ் வெளியேறிய நிலையில் மீண்டும் கேப்டன் பொறுப்பேற்ற தோனியாவது அணியைக் கரைதேற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவராலும் பெரியத் தாக்கத்தை செலுத்தி அணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை.
மொத்தம் 11 போட்டிகளில் விளையாடியுள்ள சி எஸ் கே இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஆனால் இந்த முறை அணியின் சிறந்த கண்டுபிடிப்பாக ஆயுஷ் மாத்ரே கவனம் பெற்றுள்ளார். அணிக்குள் கடைசி நேரத்தில் மாற்று வீரராக வந்த அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஆயுஷ் மாத்ரே பற்றி பேசியுள்ள சென்னை அணித் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் “ஆயுஷ் மாத்ரே, நாங்கள் எதிர்பார்க்கும் நவீன டி 20 பேட்ஸ்மேனுக்கான அனைத்தையும் பெற்றுள்ளார். பெரிய லீக் தொடர்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தும் தன்மை, எங்களைக் கவர்ந்துள்ளது. இது ஒரு நீண்டகால உறவின் தொடக்கம் என நினைக்கிறேன்” எனக் கூறி, ஆயுஷ் மாத்ரே சி எஸ் கே அணியில் நீண்டகாலம் விளையாடவுள்ளார் என்பதைக் கூறியுள்ளார்.