தொடர்புடைய செய்திகள்
- இதுக்கு தோனியை அணியில் எடுக்காமலேயே இருக்கலாம்… என்ன இப்படி பொங்கிட்டாரு பஜ்ஜி?
- தோனியின் டக் அவுட்டை ஏன் கொண்டாடவில்லை?… ஹர்ஷல் படேல் சொன்ன அடடே காரணம்!
- அணியில் சில வீரர்களுக்கு காய்ச்சல்… காலை வரை பிளேயிங் 11 தெரியவில்லை – சிஎஸ்கே கேப்டன் ருத்து!
- பஞ்சாப்பை பறக்கவிட்ட சிஎஸ்கே.. 38 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!
- தோனி, துபே சூப்பர் டக் அவுட்.. சிஎஸ்கே வைத்த சொற்ப இலக்கு! – சேஸிங்கில் இறங்கும் பஞ்சாப்!
ஷிவம் துபேவிடம் பிரச்சனை எதுவும் இல்லை… சி எஸ் கே பயிற்சியாளர் நம்பிக்கை!
நேற்று நடந்த முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய நிலையில் சென்னை அணி சூப்பர் வெற்றியை பெற்றது. இந்தபோட்டியில் சென்னை அணி முதலில் பேட் செய்து 169 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே பெற்று 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் சி எஸ் கே அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பியது. இந்த தொடரின் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய ஷிவம் துபே அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். விக்கெட்கள் தொடர்ந்து விழுந்தாலும் தோனி முன்கூட்டியே இறங்காமல் ஒன்பதாவது பேட்ஸ்மேனாக வந்தார்.
இந்நிலையில் சி எஸ் கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் பேசும் போது “எங்கள் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் எந்த பிரச்சனையும் இல்லை. ஷிவம் துபே அடுத்தடுத்து டக் அவுட் ஆனாலும் அவர் நல்ல ஃபார்மில்தான் இருக்கிறார். சில ஷாட்கள் ஆடும் போது எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழக்க நேரிடும்” எனக் கூறியுள்ளார்.