தொடர்புடைய செய்திகள்
- கோலி சோடா –Rising இணைய தொடரின் டீசர் ரிலீஸ் அப்டேட்!
- மும்பை சித்தி விநாயகர் கோவிலில் உலகக்கோப்பை.. ரோஹித் சர்மா, ஜெய்ஷா சாமி தரிசனம்..!
- என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகச்சிறந்த இன்னிங்ஸ் அதுதான்.. கோலியைப் பாராட்டிய ஷாகீன்!
- சர்வதேசக் கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளை நிறைவு செய்த ‘கிங்’ கோலி… ரசிகர்கள் வாழ்த்து மழை!
- ஒரு வருடத்துக்கும் மேலாக லண்டனில் வசிக்கும் அனுஷ்கா சர்மா… லண்டனில் குடியேறுகிறாரா கோலி?
கோலி எடுத்த அந்த முடிவு தவறான ஒன்றாகும்… முன்னாள் பயிற்சியாளர் கருத்து!
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரிக்கெட்டின் முகமாக ஒரு வீரர் இருப்பார். அந்த வகையில் இப்போது உச்சப் புகழோடு உலகளவில் ரசிகர்களைப் பெற்று இருக்கிறார் கோலி. சமீபத்தில் டி 20 உலகக் கோப்பையை வென்ற அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். அவர் உலகக் கோப்பையோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர, அந்த புகைப்படம் ஆசியாவிலேயே அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டு கோலிக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டுதான் அவர் தன்னுடைய டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன்சியை துறந்தார். ஒருநாள் போட்டிக்கான கேப்டன்சியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில் கோலி டெஸ்ட் கேப்டன்சி விலகல் ஒரு தவறான முடிவு என முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார். அதில் “டெஸ்ட் கேப்டன்சியில் கோலி விலகி இருக்கக் கூடாது. ஏனென்றால் அவர் தலைமையில் இந்திய அணி வெளிநாட்டுத் தொடர்களில் கூட மிகச்சிறப்பாக விளையாடியது. அதுமட்டுமில்லை, கேப்டன்சியில் இருந்தபோது அவரின் பேட்டிங் திறனும் சிறப்பாக இருந்தது.” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்