ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, லஷ்மண் ; டிராவிட்டுக்கு கல்தா
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகிய 3 பேரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் இணைந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோர் அடங்கிய ஆலோசனை குழு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளது. இதனை கிரிக்கெட் வாரிய செயலாளர் திரு அனுராக் தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் இந்த நட்சத்திர வீரர்களின் அனுபவம் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனினும் மற்றொரு ஜாம்பவானான டிராவிட்டுக்கு ஆலோசனை குழுவில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.