தொடர்புடைய செய்திகள்
- முகமது ஷமியை டிரேட் செய்ய முயலும் ஐபிஎல் அணி.. குஜராத் அணி நிர்வாகி தகவல்!
- ரிஷப் பண்ட் சி எஸ் கே அணிக்கு ஆடினாலும் ஆச்சர்யப்பட வேண்டாம்… முன்னாள் வீரர் பற்ற வைத்த நெருப்பு!
- விராட் கோலி உணவகத்தில் தமிழக இளைஞருக்கு அனுமதி மறுப்பு
- ஷுப்மன் கில்லை விட கேப்டனாக தகுதியுள்ளவர் இவர்தான்… டிவில்லியர்ஸ் கருத்து!
- அணிக்கு விஸ்வாசமாக இருக்கவேண்டும்… ஹர்திக் பாண்ட்யாவை சீண்டிய ஷுப்மன் கில்?
ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கும் ரிஷப் பண்ட்?
இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.
தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் பண்ட், அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். விபத்து காரணமாக கடந்த ஐபிஎல் சீசனை இழந்த ரிஷப் பண்ட் அடுத்த சீசனுக்காவது அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இப்போது அவர் அடுத்த சீசனில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் இம்பேக்ட் ப்ளேயராக களமிறக்கப்படுவார் என சொல்லப்படுகிறது. இதனால் அவர் பேட்டிங் மட்டும் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால் அவர் கேப்டனாகவே அடுத்த சீசனில் விளையாடுவார் என்றும் சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்