1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 ஏப்ரல் 2022 (14:17 IST)

ஜடேஜாவ கேப்டனாக்குதுக்கு பதிலா இவர ஆக்கி இருக்கணும்… ரவி சாஸ்திரி கருத்து!

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரவிந்தர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

சிஎஸ்கே அணியின் கேப்டனாக இந்த சீசனில் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் அவர் தலைமையில் இந்த சீசனில் சி எஸ் கே அணி மிக மோசமாக விளையாடி வரும் அனைவரும் அறிந்ததே. தோனி போன்ற ஒரு வெற்றிக் கேப்டனுக்கு பிறகு தலமையேற்றுள்ள ஜடேஜாவின் கேப்டன்சி மேல் தற்போது விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் ஜடேஜாவை கேப்டனாக்கியது தவறான முடிவு என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார், மேலும் அவர் ‘ஜடேஜாவுக்கு பதிலாக டூ பிளஸ்சியை தக்க வைத்து அவரைக் கேப்டனாக்கி இருக்கலாம்’ என்றும் கூறியுள்ளார்.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக விளையாடிய டு பிளஸ்சி ஏலத்தில் RCB அணியால் எடுக்கப்பட்டு சிறப்பான முறையில் அணியை வழிநடத்தி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.