1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

இறுதிப் போட்டியில் மழை பெய்ய எத்தனை சதவீதம் வாய்ப்புள்ளது?… வெளியான வானிலை அறிக்கை!

உலகக் கோப்பை தொடரின் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடக்க உள்ளது. இந்திய அணி இதுவரை இந்த தொடரில் எந்த அணியிடமும் தோல்வியே பெறவில்லை. லீக் போட்டிகளில் மழை காரணமாக ஒரு போட்டியின் முடிவு மட்டும் தெரியவில்லை. சூப்பர் 8 சுற்றிலும் அனைத்து போட்டிகளிலும் வென்று, அரையிறுதியையும் வென்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.

இதே போலதான் தென்னாப்பிரிக்கா அணியும், இந்த தொடரில் இதுவரை தோல்வியே சந்திககாத அணியாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இதுவரை உலகக் கோப்பை வரலாற்றில் இப்படி தோல்வியே சந்திக்காத இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறை. 

இந்நிலையில் இன்று போட்டி நடக்கும் பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் போட்டி நடக்கும் நேரத்தில் மழை பெய்ய 40 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது. ஒருவேளை நாளை மழைக் காரணமாக போட்டி நடத்தப்பட முடியாவிட்டாலோ அல்லது பாதி நடக்கையில் மழை குறிக்கிட்டாலோ ரிசர்வ் நாளான நாளை மறுநாள் போட்டி நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.