1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (14:57 IST)

கிரிக்கெட் ரசிகர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்

cricket
ஹைதராபாத்தில் ல்டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி   இந்தியாவுக்கு எதிரான  முதல் டி-20 போட்டியில் வெற்றி பெற்றது இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்தாலும் ஆஸ்திரேலிய அணி திறமையான பேட்டிங்கால் வெற்றி பெற்றது.

இந்த   நிலையில், இந்தியா  அணிகளுக்கு இடையேயான 2 வது போட்டி நாளை  நாக்பூரில்  நடைபெறவுள்ளது.

3 வது டி-20 போட்டி வரும் 25 ஆம் தேதி(  ஞாயிற்றுக்கிழமை) ஹைதராபாத்தில்  நடைபெற உள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்கள்  டிக்கெட் எடுக்க இன்று  குவிந்தனர்.

அப்போது, ரசிகர்கள் மீது போலீஸார் அடிதடி நடத்தினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவாலி வருகிறது.