1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Over 3000 applications came to bcci for coach designation

இந்திய அணியின் பயிற்சியாளராக 3000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்.. மோடி, சச்சின்லாம் லிஸ்ட்ல இருக்காங்க!

கோலி
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் இறுதியோடு முடிவடைகிறது. அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என சொல்லப்படும் நிலையில், அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிசிசிஐயின் லிஸ்ட்டில் கவுதம் கம்பீரும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நேற்றோடு விண்ணப்பங்களை வரவேற்பதற்கான தேதி முடிந்துள்ளது. இந்த முறை ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்நிலையில் 3000க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிதுள்ளனராம்.

இதில் நரேந்திர மோடி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய பெயர்களில் இருந்தெல்லாம் விண்ணப்பங்கள் வந்துள்ளனவாம். இந்த விண்ணப்பங்களை பரிசீலுக்கும் பணியை இப்போது பிசிசிஐ அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
சர்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள், வீராங்கனைகள்!