1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 21 ஜனவரி 2023 (19:14 IST)

ஆன்லைன் பண மோசடி: ரூ.20 கோடி வரை பணத்தை இழந்த ஐசிசி அமைப்பு

ஆன்லைன் பண மோசடியில் ரூ.20 கோடி வரை ஐசிசி கிரிக்கெட் அமைப்பு பணத்தை இழந்துள்ளது.

இணையதளம் பரவலாக உள்ளதால் அனைத்து மக்களும் எளிதில் பயன்படுத்துன் வகையில் உள்ளது. இதனால், உலகம் முழுக்க சைபர் மோசடிகள்  நடந்துவருகிறது.

இந்த நிலையில், உலகில் மிகப்பெரிய விளையாடு அமைப்பான ஐசிசி கிரிக்கெட் வாரியமும் இந்த மோசடியில் பணத்தை இழந்துள்ளது.

இந்த நிலையில், போலி மின்னஞ்சல் மூலமாக ஐசிசி வங்கிக் கணக்கில் இருந்து ரூ.20 கோடி பணத்தை இழந்துள்ளது.

இந்த பண மோசடி பணவர்த்தனை ஒரேமுறையில் ஒட்டுமொத்தமாக நடைபெற்றதா அல்லது சிறியதாக கொள்ளையடிக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

ஐசிசி கிரிக்கெட் அமைப்பிடம் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.