தொடர்புடைய செய்திகள்
- RCB அணியில் தனிப்பட்ட வீரர்களுக்கே முக்கியத்துவம்... அதனால்தான் இன்னும் கோப்பை வெல்லவில்லை - பார்த்திவ் படேல்!
- ஐபிஎல் டெல்லி அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நீக்கம்.. என்ன காரணம்?
- ஷமி ஒன்றும் இளம் வீரர் இல்லை.. அணியில் இனி அவர் ரோல் என்ன?- முன்னாள் பயிற்சியாளர் கேள்வி
- ரோஹித் மற்றும் கோலி ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வு கொடுங்கள்… முன்னாள் இந்திய வீரர் கோரிக்கை!
- நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!
கோலிதான் பெஸ்ட் ப்ரண்ட்… காயத்தில் இருக்கும் போது அவர் வெளிப்படுத்திய அன்பு – ஷமி பகிர்ந்த தகவல்!
கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிகச்சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர் முகமது ஷமி. ஆனால் அதன் பின்னர் காயம் காரணமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து சில மாதங்கள் விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படும் அவருக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது. அதையடுத்து இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டெழுந்து வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அவர் ஷமி அளித்துள்ள ஒரு நேர்காணலில் “அணிக்குள் எனது நெருக்கமான நண்பர்கள் கோலியும், இஷாந்த் ஷர்மாவும்தான். அவர்கள் தான் நான் காயமடைந்த போது போன் செய்து விசாரிப்பார்கள். நான் எப்படி குணமாகி வருகிறேன் என்று நலம் விசாரிப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.