செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 20 அக்டோபர் 2022 (15:36 IST)

வீரர்கள் தொந்தியோடு பிட்னெஸ் இல்லாமல் இருக்கிறார்கள்… சாடிய முன்னாள் கேப்டன்!

பாகிஸ்தான் அணியில் பல வீரர்கள் பிட்னெஸ் இல்லாமல் இருப்பது பின்னடைவு என முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அக்டோபர் 23 ஆம் தேதி நடக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி கருதப்படுகிறது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்க்ள் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் அணியில் பல வீரர்கள் பிட்னெஸ் இல்லாமல் இருப்பதாக மிஸ்பா உல்ஹக் தெரிவித்துள்ளார். மேலும் அவர் “சில வீரர்களைத் தவிர மற்றவர்கள் தொந்தியோடு பிட்னெஸ் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் எவ்வளவு ஸ்கோர்கள் எடுத்தாலும், அது பின்னடைவுதான்” எனக் கூறியுள்ளார்.