1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. LSG team becomes the second highest scoring team in ipl

ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர்… நேற்றைய போட்டியில் லக்னோ அணி படைத்த சாதனை!

கே எல் ராகுல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 38-வது போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதின.  பஞ்சாப் அணி டாஸ் வென்றதை அடுத்து அவர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் கே.ஏல்.ராகுல் 12  ரன்களும், கேல் மேயர்ஸ்  54 ரன்களும், படோனி 43  ரன்களும், ஸ்டோனிஸ் 72  ரன்களும், பூரன் 45 ரன்களும் அடித்தனர். 20  ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் அடித்து, பஞ்சாப் அணிக்கு 258 ரன்கள் இலக்கு நிர்ணயித்தனர். இந்த ஸ்கோரானது ஐபிஎல் வரலாற்றிலேயே அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னதாக 2013 ஆம் ஆண்டு பெங்களூர் அணி பூனே அணிக்கு எதிராக 263 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளது.

பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 201 ரன்கள் மட்டுமே சேர்த்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
என்ன தோனியே பொறுமையிழந்து கத்த ஆரம்பிச்சிட்டாரு… ஃபீல்டிங்கில் சொதப்பிய சி எஸ் கே!