தொடர்புடைய செய்திகள்
- பலவீனத்தை உணர்ந்து ஆர் சி பி கேப்டன் எடுத்த முடிவு… டாஸ் அப்டேட்!
- ஏப்ரல் 17ஆம் தேதி ஐபிஎல் போட்டி 16ஆம் தேதிக்கு மாற்றம்.. என்ன காரணம்?
- தோனியின் அதிரடி பேட்டிங் பற்றி முன்னாள் வீரர் கருத்து
- ரோகித் அவுட்... கொண்டாடிய CSK ரசிகர் அடித்து கொலை...அதிர்ச்சி சம்பவம்
- ஐபிஎல் தொடங்கி ஒரு வெற்றிக்கூட பெறாத மும்பை இந்தியன்ஸ்! – இன்று ராஜஸ்தான் ராயல்ஸுடன் மோதல்!
டீகாக், பூரான் அதிரடி.. பவுலிங்கில் கலக்கிய மேக்ஸ்வெல்- பெங்களூர் அணிக்கு லக்னோ நிர்ணயித்த இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாஃப் டு பிளசிஸ் முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் டிகாக் (81), ஸ்டாய்னஸ்(24) மற்றும் பூரான் (40) ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். கேப்டன் கே எல் ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. பெங்களூர் அணியில் சிறப்பாக பந்துவீசிய மேக்ஸ்வெல் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். யாஷ் தயார் 24 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். சேஸிங்கில் சிறப்பாக செயல்படும் ஆர் சி பி அணி இந்த இலக்கை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.