1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 ஜூலை 2022 (09:23 IST)

ஆட்டத்தின் போக்கையே மாற்றிய பட்லர் செய்த தவறு… ரிஷப் பண்ட் சாதனை சதம்!

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 259 ரன்கள் எடுத்தது இதனையடுத்து 260 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 42.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டிய வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி 75 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா கூட்டணி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 125 ரன்கள் சேர்த்து தனது முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் சதத்தை பதிவு செய்தார். ஆனால் அவர் ஒரு ரன்னில் விளையாடிக் கொண்டிருக்கும் போது எளிமையான ஸ்டம்ப் இட் வாய்ப்பை பட்லர் கோட்டை விட்டார். அந்த தவறு போட்டியின் முடிவையே மாற்றிவிட்டது.

வெளிநாடுகளில் இந்திய விக்கெட் கீப்பர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோராக ரிஷப் பண்ட்டின் 125 ரன்கள் பதிவாகியுள்ளது.