செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 18 ஜூலை 2022 (08:02 IST)

3வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி: தொடரையும் வென்றது!

india 3rd
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 259 ரன்கள் எடுத்தது இதனையடுத்து 260 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 42.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டிய வெற்றி பெற்றது
 
இந்திய அணியில் ரிஷப் பண்ட் மிக அபாரமாக விளையாடி 125 ரன்கள் அடித்தார் என்பதும் அதில் 16 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து இந்த தொடரை 21 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக ரிஷப் பண்ட் மற்றும் தொடர் நாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.