1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (16:28 IST)

ஐபிஎல் ஏலத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் ரூ.8 கோடிக்கு ஏலம்

ஐபிஎல் ஏலத்தில்  ஜொப்ரா ஆர்ச்சரை ரூ.8  கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக நடந்து வரும் தொடர் ஐபிஎல். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மும்பை அணி நிர்வாகம் ரூ.8 கோடிக்கு ஜோப்ரா ஆர்ச்சரை  ஏலத்தில் எடுத்துள்ளது. அதேபோல் ரோவ்மேன் போவலை ரூ.2.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

மேலும், குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 3.2 கோடிக்கு யாஷ் தயாளை ஏலத்தில் எடுத்துள்ளது. சென்னை கிங்க்ஸ் அணி ரூ.1.5 கோடிக்கு ராஜ்வர்தனை ஏலத்தில் எடுத்துள்ளது.