தொடர்புடைய செய்திகள்
- கொஞ்ச நேரம் டெஸ்ட் இன்னிங்ஸ் போல விளையாடு… ராகுலுக்கு ப்ளான் போட்டுக் கொடுத்த கோலி!
- அதிரடி காட்டும் ஆஸ்திரேலியா; அடுத்தடுத்து டக் அவுட்! – ரசிகர்கள் அதிர்ச்சி
- இந்தியாவின் பவுலிங்கில் திணறும் ஆஸ்திரேலியா; மாஸ் காட்டும் ஜட்டு!
- யோவ் மிலிட்ரி.. நீ எங்கய்யா இங்க? – கிரிக்கெட் க்ரவுண்டுக்குள் நுழைந்த ஜார்வோ!
- சென்னையில் இன்று இந்தியா – ஆஸ்திரேலியா மேட்ச்! – மழை வர வாய்ப்பு?
உலகக் கோப்பையுலும் வேலையைக் காட்டிய ஜார்வோ… ஐசிசி விதித்த ரெட் கார்ட்!
நேற்று சென்னையில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி மிகவும் லோ ஸ்கோர் போட்டியாக இருந்தாலும் விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது. 200 ரன்களை சேஸ் செய்த இந்தியா, கோலி மற்றும் ராகுல் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் போராடி வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் சுவாரஸ்யமான விஷயங்களில் ஒன்றாக அமைந்தது இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல யுடியூபர் ஜார்வோ இந்திய அணியின் சீருடையை அணிந்துகொண்டு மைதானத்துக்குள் நுழைந்தது. அதன் பின்னர் அவரை மைதான காவலர்கள் வெளியே அனுப்பினார்கள்.
ஜார்வோ என்று அழைக்கப்படும் டேனியல் ஜார்விஸ் இதுபோல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மைதானங்களுக்குள் ஏற்கனவே சில முறை குழப்பங்களை உண்டாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது ஐசிசி அவரை இனிமேல் எந்தவொரு உலகக் கோப்பை போட்டியையும் பார்க்க முடியாதபடி அவருக்கு தடை விதித்துள்ளது.