தொடர்புடைய செய்திகள்
- கோலி, ரோஹித் அழுததை பார்த்ததும் எனக்கு வருத்தமாக இருந்தது… அஸ்வின் ஆதங்கம்!
- இன்று நான்காவது டி 20 போட்டி… தொடரை வெல்லுமா இந்தியா?
- கோலி 2031 உலகக் கோப்பையில் கூட விளையாடுவார்… டேவிட் வார்னர் கருத்து!
- IND vs SA - டி20: சூர்யகுமார் தலைமையிலான இந்தியா அணி அறிவிப்பு
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய வீரர்கள் அறிவிப்பு
ஒருநாள் போட்டிகளிலும் கழட்டிவிடப்படுகிறாரா ரோஹித் ஷர்மா?
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றது. இதனால் இந்திய அணியின் வீரர்கள் மன உளைச்சலில் உள்ளதாக சொல்லப்பட்டது. குறிப்பாக இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் ஷர்மா தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் மைதானத்திலேயே கண்கலங்கினார்.
தற்போது 36 வயதாகும் ரோஹித் ஷர்மா இன்னும் எத்தனை ஆண்டுகள் சர்வதேசக் கிரிக்கெட் விளையாடுவார் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இதையடுத்து இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல உள்ள சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெறவில்லை.
ஏற்கனவே டி 20 போட்டிகளுக்கான அணியில் இருந்து அவர் பிசிசிஐ யால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது ஒருநாள் போட்டிகளிலும் அவரை கழட்டி விட பிசிசிஐ முடிவு செய்கிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அடுத்த உலகக் கோப்பையை மனதில் வைத்துக்கொண்டு புதிய இந்திய அணியைக் கட்டமைக்க இந்த முடிவை பிசிசிஐ எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்