தொடர்புடைய செய்திகள்
- மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!
- ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!
- கோலி ஒரு கொடுமைக்காரர்… ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் தாக்குதல்!
- சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!
- இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ‘பாகுபலி 2’ வை முந்திய ‘புஷ்பா 2’!
பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை வெகு சிறப்பாக வழிநடத்தி வெற்றியும் பெறவைத்தார்.
இந்நிலையில் தற்போது நடந்து காபா டெஸ்ட்டில் 9 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை பும்ரா படைபுமாத்துள்ளார். ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை பும்ராதான் ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வர்ணனையாளர் இயான் மோரிஸ் “பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை. அவர் பந்தை எறிவதாக நான் சொல்லவில்லை. ஆனால் அவரின் பந்துவீச்சை நான் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதை ஆய்வு செய்யவேண்டும்” எனக் கூறியுள்ளார்.