1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 16 செப்டம்பர் 2019 (13:10 IST)

தம்பி... பாத்து ஜாக்கிரதை: ரிஷப் பந்த்-ஐ எச்சரித்த கம்பீர்!

தோனிக்கு பின்னர் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக முன்நிறுத்தப்படும் ரிஷப் பந்த-ஐ எச்சரித்துள்ளார் கவுதம் கம்பீர். 
 
சிறந்த விக்கெட் கீப்பராக் திகழ்ந்த தோனிக்கு மாற்றாக ரிஷப் பந்த்-ஐ இந்திய அணி நிர்வாகம் முன்னிறுத்துகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வகை போட்டிக்கு ரிஷப் பந்த்-ஐ விக்கெட் கீப்பராக்க அணி நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ளது. 
 
ரிஷப் பந்த் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில், முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர், ரிஷப் பந்த்-த்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளதாவது, 
ரிஷப் பந்த் எப்போதும் சிறப்பாக உற்சாகத்துடன் விளையாடக் கூடியவர். ஆனால், எனக்கு பிடித்தவரான சஞ்சு சாம்சன் அவருக்கு போட்டியாக பின்னால் நின்று கொண்டிருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். சாம்சன் ரிஷப் பந்த்துக்கு மிகவும் சவாலாக திகழ்ந்து வருகிறார். எனவே ரிஷப் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.