1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (21:37 IST)

கவுதம் காம்பீருக்கு எதிராக ஆம் ஆத்மி கோர்ட்டில் வழக்கு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீரிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளது தொடர்பாக ஆம் ஆத்மி கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கவுதம் காம்பீர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து அவர் கிழக்கு டெல்லி தொகுதியில் வேட்பாளராக போட்டிடுகிறார். 
 
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷி சார்பில் அதே தொகுயில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் டெல்லி கோர்டில் ஒருவழக்கு தாக்கல் செய்துள்ளார்.
 
அதில், காம்பீர் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை டெல்லியில் வைத்துள்ளார். இதற்கு இரு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதன் காரணத்தால் காம்பீரை தகுதிநீக்கம்ம்செய்ய வேண்டும் என்று இதில் தெரிவிக்கப்படுள்ளது.