தொடர்புடைய செய்திகள்
- டி-20 பயிற்சி போட்டி கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி!
- 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வி: தொடரை வென்றது இங்கிலாந்து!
- சவுரவ் கங்குலிக்கு அநீதி… பாஜக vs திரிணாமுல் காங்கிரஸ்!
- கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இந்த நடிகரா?
- ஒரு ஆண்டில் அதிக வெற்றி: இந்திய அணியின் புதிய உலக சாதனை!
வாழ்நாள் முழுவதும் நிர்வாகியா இருக்க முடியுமா? – சூசகமாக சொன்ன கங்குலி!
பிசிசிஐ (BCCI) தலைவராக தான் தேர்வு செய்யப்படாதது குறித்து சவுரவ் கங்குலி சூசகமாக பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி இருந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக ஜெய்ஷா, துணை தலைவராக ராஜீவ் சுக்லா மற்றும் பொருளாளர் அஷிஷ் ஷெலர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிசிசிஐ தலைவராக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக ஒருபக்கம் கூறப்பட்டாலும், மற்றொரு பக்கம் அவர் பாஜக அரசியலுக்கு ஆதரவாக பேச மறுத்ததால் தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்கப்படவில்லை என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.
இதுகுறித்து தற்போது பேசியுள்ள சவுரவ் கங்குலி “காலம் முழுவதும் விளையாடிக் கொண்டே இருக்க முடியாது. அதுபோல வாழ்நாள் முழுவதும் நிர்வாகியாக இருக்க முடியாது. நிராகரிக்கப்படுவது வாழ்க்கையின் ஓர் அங்கம்” என சூசகமாக பேசியுள்ளார்.
Edited By: Prasanth.K