1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 மார்ச் 2021 (13:21 IST)

மூன்றாவது ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு!

இந்தியா – இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. முதல் இரண்டு ஆட்டங்களில் இரு நாடுகளும் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில் இன்றைய மூன்றாவது ஆட்டத்தின் வெற்றி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் தொடரில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் அணியில் இடம்பெற்றுள்ளார்.