தொடர்புடைய செய்திகள்
- இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் விலகுகிறது ட்ரீம் 11! ஆசிய கோப்பைக்கு என்ன ஜெர்ஸி?
- ஆன்லைன் சூதாட்ட மசோதா எதிரொலி: பணம் கட்டி விளையாடும் போட்டிகளை நிறுத்துகிறது Dream 11!
- 3 ஆண்டுகள் சிறை.. 1 கோடி ரூபாய் அபராதம்! ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அரசின் கிடுக்கு பிடி!
- பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!
- ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம்: சுரேஷ் ரெய்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை!
இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11
ஒன்றிய அரசு சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட மசோதா, பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு ஒரு பெரும் அடியாக விழுந்துள்ளது. இந்த மசோதாவின் மூலம், பணம் கட்டி விளையாடும் அனைத்து விளையாட்டுகளும் சூதாட்டமாகவே கருதப்பட்டு, முற்றிலுமாகத் தடை செய்யப்படுகின்றன.
இந்த நடவடிக்கை காரணமாக, பிரபல ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான ட்ரீம்11, தனது தளத்தில் பணம் கட்டி விளையாடும் போட்டிகளை நிறுத்த தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக உள்ளது. இதன் காரணமாக பெருமளவில் வருவாயை ஈட்டி வருகிறது.
ஆனால் தற்போது இந்த மசோதா காரணமாக இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை என்று பிசிசிஐயிடம் dream 11 நிறுவனம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய ஸ்பான்சரைத் தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்