தொடர்புடைய செய்திகள்
- இந்தியா – பாகிஸ்தான் போட்டி; மழை பெய்தாலும் போட்டி உண்டு!? – ஆசிய கிரிக்கெட் கவுன்சில் விதிவிலக்கு!
- இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றுதான்: காங்கிரஸ் பிரமுகர் ப.சிதம்பரம்
- இந்த இரு அணிகளுக்குதான் உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு… காரணம் சொல்லும் முத்தையா முரளிதரன்!
- இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்! டெல்லியில் பலத்த பாதுகாப்பு..!
- இந்தியாவுக்கு எதிராக 100 சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்… பாகிஸ்தான் கேப்டன் நம்பிக்கை!
இந்திய அணியில் மீண்டும் இணைந்த பும்ரா…!
ஆசியக் கோப்பை தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் தொடங்கி தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மழைக் காரணமாக முடிவில்லாமல் போனது. அதனால் அந்த போட்டியில் இந்திய அணியின் பவுலர் பும்ரா பந்துவீசவில்லை.
இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியின் நம்பிக்கை நட்சத்திரமான பும்ரா தனிப்பட்ட சூழல் காரணமாக ஆசியக் கோப்பையில் இருந்து தற்காலிகமாக விலகி இந்தியா சென்றிருந்தார். அவர் நேபாளத்துக்கு எதிரான அடுத்த போட்டியில் விளையாடவில்லை.
அவருக்கு குழந்தை பிறந்ததை அடுத்து இந்தியாவுக்கு சென்ற அவர் இப்போது இலங்கையில் உள்ள இந்திய அணியோடு இணைந்துள்ளார். 10 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடக்கும் போட்டியில் அவர் விளையாடுவார் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.