1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 21 மே 2021 (08:53 IST)

புவனேஷ்வர் குமாரின் தந்தை காலமானார்… ரசிகர்கள் இரங்கல்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் தந்தை கிரண் பால் சிங் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் புவனேஷ்வர் குமார். கடந்த ஆண்டு இவர் துபாயில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த போது அவரின் தந்தைக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இவர் தொடரில் இருந்து விலகி இந்தியா சென்றார். அப்போதிருந்து சிகிச்சை பெற்று வந்த கிரண் பால் சிங் நேற்று அவரது இல்லத்தில் காலமாகியுள்ளார். இதையடுத்து ரசிகர்களும் சக வீரர்களும் புவனேஷ்வர் குமாருக்கு இரங்கலும் ஆறுதலும் கூறி வருகின்றனர்.