தொடர்புடைய செய்திகள்
- இந்தியா, பாகிஸ்தானுக்கு வந்து ஆடாவிட்டால் கிரிக்கெட் ஒன்றும் அழிந்துவிடாது – பாகிஸ்தான் பவுலர் கோபம்!
- ஸ்மிருதி மந்தனாவை பாக்கணும்! கஷ்டப்பட்டு வந்த மாற்றுத்திறனாளி சிறுமி! - ஸ்மிருதி கொடுத்த ஆச்சர்யம்!
- ருத்துராஜுக்கு கிடைக்கும் ஆதரவு… தேர்வுக்குழுவை கழுவி ஊத்தும் முன்னாள் வீரர்கள்!
- ஹர்திக் பாண்ட்யாவுக்கு இளம் வீரர்களிடம் ஆதரவில்லையா?... அதனால்தான் கேப்டன் பதவி கிடைக்கவில்லையா?
- இலங்கை செல்லும் இந்திய அணி.. கிண்டல் செய்து வாழ்த்து கூறிய சசிதரூர் எம்பி..!
“ஹர்திக் திறமையான வீரர்தான்… ஆனால்?” – தேர்வுக்குழு தலைவர் அகார்கர் விளக்கம்!
உலகக் கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் இனிமேல் டி 20 அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டி 20 அணிக்குக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்வை கேப்டனாக இந்திய அணி நிர்வாகம் நியமித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் இனி இந்திய அணிக்குக் கேப்டன் பொறுப்புக்கான வீரர்கள் பட்டியலில் இடம்பெற மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா ஏன் கேப்டனாக நியமிக்கப்படவில்லை என்பது குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் பேசியுள்ளார். அதில் “ஹர்திக் பாண்ட்யா அணிக்கு முக்கியமான வீரர்தான். அவர் திறமையான வீரராக இருந்த போதும் அவரின் பிட்னெஸ் சவாலளிக்கக் கூடியதாகவே உள்ளது. எல்லா நேரத்திலும் விளையாட தகுதி வாய்ந்த கேப்டன்தான் இந்திய அணிக்குத் தேவை” என அவர் கூறியுள்ளார்.