1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Afanisthan captain Rashid khan emotional about semi final entry

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

உலகக்கோப்பை
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 115  ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 19 ஓவர்களில் 114 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடிய நிலையில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி முதன் முதலாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆப்கானிஸ்தான் அணிக் கேப்டன் ரஷீத் கான் “எங்களைப் போன்ற அணிகளுக்கு அரையிறுதி என்பது பெரிய கனவு. நியுசிலாந்து அணியை லீக் சுற்றில் வென்ற போது கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. இப்போது மேலும் சந்தோஷமாக உள்ளது. இந்த தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. ஆப்கன் அணி வரலாற்று சாதனை