தொடர்புடைய செய்திகள்
- பொம்மைகளின் தலையை வெட்டி எறியும் தாலிபன்கள்: காரணம் என்ன?
- உணவுக்கே வழியில்லை.. குழந்தைகளை விற்கும் அவலம்! – ஆப்கானிஸ்தானில் சோகம்!
- 3 ஆயிரம் லிட்டர் மது; கால்வாயில் கொட்டிய தாலிபான்! – கதறும் மதுப்பிரியர்கள்!
- தேர்தலே கிடையாது.. எதுக்கு தேர்தல் ஆணையம்..? ரிஜெக்டட்..! – தாலிபான்கள் புதிய உத்தரவு!
- ஆப்கன் பெண்கள் நீண்ட தூரம் பயணிக்க ஆண் உறவினர் துணை அவசியம்: தாலிபன்!
ஊதியமாக தானியம் வாங்கும் தாலிபன்கள்
வேலை செய்பவர்களுக்கு சன்மானமாக உணவு வழங்கும் திட்டத்தை தாங்கள் விரிவுபடுத்தி உள்ளதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் பல்லாயிரம் பொதுத்துறை ஊழியர்களுக்கு நன்கொடையாக பெறப்பட்ட கோதுமை ஊதியமாக வழங்கப்படும்.
2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தை தாலிபன்கள் கைப்பற்றிய பின்பு அங்கு பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.
ஊழியர்களுக்கு ஊதியமாக தானியத்தை வழங்கும் தாலிபான்களின் முடிவு பொருளாதார நெருக்கடியை வெளிக்காட்டும் வகையில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் சரிபாதி பேர் ஏதாவது ஒரு வகையில் உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.
4400 கோடி அமெரிக்க டாலர் நிதியும் அந்த நாட்டில் மேற்கொள்ளப்படும் மனிதநேய சேவைகளுக்காக தேவை என்றும் ஐக்கிய நாடுகள் மன்றம் கூறுகிறது.